பிறை தென்படாததால் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது ரமலான் பண்டிகை

நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட இருந்த ரமலான் பண்டிகை, பிறை தென்படாததால் நாளை மறுதினம் (ஜுன் 16) கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஹயூப் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட இருந்த ரமலான் பண்டிகை, பிறை தென்படாததால் நாளை மறுதினம் (ஜுன் 16) கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஹயூப் அறிவித்துள்ளார். 

ரமலான் நோன்பு ஆரம்பித்து இன்றுடன் ஒரு மாதம் ஆன நிலையில், பிறை தெரிந்தவுடன் இரமலான் கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். இதனால், ரமலான் விடுமுறை நாளையா..? அல்லது நாளை மறுதினமா..? என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், ரமலான் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், பிறை தென்படாததால் நாளை மறுதினம் (ஜுன் 16) ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது ஹயூப் அறிவித்துள்ளார். இதனால், நாளை அறிவிக்கப்பட்டிருந்த பொதுவிடுமுறை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல, நாளை செயல்படும். சனிக்கிழமை பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, கோவை ஹிலால் கமிட்டியின் சார்பில் ஷவ்வால் பிறை பார்த்து நோன்பு பெருநாள் முடிவு செய்யும் கூட்டம், ஷம்சுல் இஸ்லாம் ஹனஃபி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் M.A. இஸ்மத் தலைமையில் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் எங்கும் ஷவ்வால் பிறை தென்படாததால் நாளை ரமலான் பிறை 30-ஆக பூர்த்தி செய்து, நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஷவ்வால் பிறை 1 என்றும் நோன்பு பெருநாள் என்றும் முடிவு செய்யப்பட்டது. 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...