கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்த உறுதி மொழியை 300-க்கும் மேற்பட்டோர் எடுத்துக் கொண்டனர்.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் குறித்த உறுதி மொழியை 300-க்கும் மேற்பட்டோர் எடுத்துக் கொண்டனர். 

குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு பிளக்ஸ் போர்டு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் திறந்து வைத்தார். மேலும், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வாகனங்களில் பொருத்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அவர் தொடங்கி வைத்தார். 

பின்னர், மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கில் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் கல்வி பயின்று முறை சார்ந்த பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 7 மாணவ, மாணவிகளுக்கு சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ. 17,000 கல்வித் தொகைக்கான காசோலை, கல்வி உபகரணங்கள் மற்றும் ரெடிமேடு ஆடைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார்.

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து தற்போது பட்டப்படிப்பு முடித்த 15 பேருக்கு 'இளம் சாதனையாளர் விருது" சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கி ஊக்குவித்தார். மேலும், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களுக்கு போர்டு கார் நிறுவனம் மற்றும் ஹெல்பிங் மைன்ட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்ட கணினிகள் மற்றும் உலக உருண்டைஉள்ளிட்டவைகளை சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர்களுக்கு அவர் வழங்கினார். 

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...