கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி : முதற்கட்டமாக ரூ. 50,000 இழப்பீடு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கூடலூரை அடுத்த வாச்சகொல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்னன் (48). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடித்து பாடந்துரை பஜாரில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு இரவு 7 மணியளவில் தனியாக வீடு திரும்பியுள்ளார். சுண்ட வயல் பகுதியில் சென்ற போது, அங்கு வந்த காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவர், இறந்த விபரம் யாருக்கும் தெரியாத நிலையில், மறுநாள் காலையில் அந்த வழியாக வந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் பார்த்து கிராம மக்களுக்கு தகவல் அளித்துள்ளார்.



பின்னர், வனத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினரிடம் கிராமவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ராதாகிருஷ்ணனின் உடலை எடுத்துச் செல்லவிடாமல் தடுத்தனர். யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை சமாதானப்படுத்திய வனத்துறையினர் மற்றும் போலீசார், உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, காட்டு யானை தாக்கியதில், உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் மனைவிக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்பட்டது. 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...