வாய்க்கால், ஆறுகளை தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை : கோவை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களை தூர்வாருதல் போன்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார்.

கோவை : கோவை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்களை தூர்வாருதல் போன்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார். 



கோவை மாநகராட்சியில் 85வது வார்டு எம்.ஜி.ஆர் நகர் சேத்துமாவாய்க்காலில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக தூர்வாரப்பட்டுள்ளதையும், பொக்ளின் எந்திரம் மூலமாக மேலும் பணிகள் மேற்கொள்வதையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கிரீன் பார்க் பகுதியில் உள்ள வாய்க்காலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், 76-வது வார்டு, எல்.ஐ.சி காலனியில் உள்ள சேத்துமாவாய்க்கால் பகுதியினை பார்வையிட்டார்.



பின்னர், வாய்க்காலில் மழைநீர் செல்வதற்காகவும் அதிக மழையின்போது குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வழிந்தோடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக தேவையான பணிகளை மேற்கொள்ளவும், கழிவு நீர் செல்ல வாய்க்கால் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். குறிச்சி என்.பி.இட்டேரி மற்றும் போத்தனூரில் 95-வது வார்டு பேச்சியம்மன் கோயில் தெருவில் உள்ள வாய்க்கால்களில் தண்ணீர் தடையின்றி செல்வதையும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார். 

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...