கூட்டு முயற்சியால் 15 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளலூர் குளத்தைச் சென்றடைந்த நொய்யல் ஆற்று நீர்

கோவை: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள், பொதுமக்களின் கூட்டு முயற்சியால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளலூர் தொட்டிக்கு நொய்யல் ஆற்றுநீர் சென்றடைந்தது.


கோவை: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள், பொதுமக்களின் கூட்டு முயற்சியால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளலூர் குளத்திற்கு நொய்யல் ஆற்றுநீர் சென்றடைந்தது.

கடந்த சில நாட்களாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால், மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள், அணைகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சிறுவாணி அணையில் நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நொய்யல் ஆறு மற்றும் அதன் நீர்பிடிப்புப் பகுதிகள் அதிகளவு நீர்வரத்தைப் பெற்றுள்ளன.



நொய்யல் ஆற்றில் இருந்து வெளியேறும் நீர், ராஜவாய்க்கால், சேத்துமா உள்ளிட்ட வாய்க்கால்களின் மூலமாக வெள்ளலூர் குளத்தை வந்தடைகிறது. மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சிறுதுளி உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து ராஜவாய்க்காலில் இருந்த சுமார் 1,600 ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும், கடந்த 3 ஆண்டுகளாக வெள்ளலூர் குளத்திற்கு நீர் பாய்ந்து செல்லும் பகுதிகளை தூர்வாரி, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதன் பலனாக, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளலூர் குளத்திற்கு நொய்யல் ஆற்றின் நீர் சென்றடைந்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



"தற்போது வரை தூர்வாரும் பணி முழுவதும் நிறைவடையவில்லை. நீர்செல்லும் வழித்தடங்களான வாய்க்கால்களில் தண்ணீர் தடையின்றி செல்வதற்கான சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மழையினால் மட்டுமே வெள்ளலூர் குளம் நிரம்பிவிடாது. இந்தப் பருவமழை முடிவதற்குள், வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் தடையின்றி பாய்ந்தால் மட்டுமே குளம் நிரம்பி வழியும்," இவ்வாறு தன்னார்வலர் மணிகண்டன் கூறினார்.



95 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வெள்ளலூர் குளமானது 15 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. இதன்மூலம், 327 ஏக்கர் விவசாயங்கள் நேரடியாகவும், 20 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவோ பாசனவசதி பெறுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...