பயணிகளின் நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இயக்கப்பட்ட எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் வரையில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இயக்கப்பட்ட எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் வரையில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் இடையே இயக்கப்படும் (ரயில் எண். 07118) ரயிலின் சேவை அடுத்த மாதம் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் வியாழக்கிழமைகளில் இரவு 09.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் இரவு 10.55 மணியளவில் ஐதராபாத் சென்றடைகிறது. 

ஐதராபாத் - எர்ணாகுளம் ரயில்நிலையம் இடையே இயக்கப்படும் (ரயில் எண். 07117) ரயிலின் சேவை அடுத்த மாதம் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் புதன்கிழமைகளில் நண்பகல் 12.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் மாலை 05.30 மணியளவில் எர்ணாகுளம் சென்றடைகிறது. 

இதேபோல, கொச்சிவெலி - ஐதராபாத் சிறப்பு கட்டண ரயிலின் சேவை அடுத்த மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் கொச்சுவெலியில் இருந்து காலை 07.45 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், மறுநாள் மதியம் 02.00 மணியளவில் ஐதராபாத்தை அடைகிறது. 

ஐதராபாத் - கொச்சிவெலி சிறப்பு கட்டண ரயிலின் சேவை அடுத்த மாதம் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் ஐதரபாத்தில் இருந்து இரவு 09.00 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், திங்கட்கிழமை 03.20 மணியளவில் கொச்சிவெலியை அடைகிறது. 

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...