உயிரைப் பணயம் வைத்து ஆற்று வெள்ளத்தில் பயணம் செல்லும் உடுமலை மலைக்கிராம மக்கள் : சம்பக்காடு பகுதியை மீட்டு தரக் கோரிக்கை

திருப்பூர்: உடுமலை அருகே மலைவாழ் மக்களின் வழித்தடத்தைக் கேரளா வனத்துறையினர் அடைத்ததால், வேறு வழியின்றி உயிரைப் பணயம் வைத்து ஆற்று வெள்ளத்தில் பயணிக்க வேண்டிய நிலைக்கு மலைக் கிராம மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்: உடுமலை அருகே மலைவாழ் மக்களின் வழித்தடத்தைக் கேரளா வனத்துறையினர் அடைத்ததால், வேறு வழியின்றி உயிரைப் பணயம் வைத்து ஆற்று வெள்ளத்தில் பயணிக்க வேண்டிய நிலைக்கு மலைக் கிராம மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, மஞ்சம்பட்டி, மூங்கில்பள்ளம் கீழானவயல், தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இவற்றில், 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல நூறு ஆண்டுகளாக தங்கள் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த சம்பக்காடு பாதையை பயன்படுத்தி வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் கேரளா வனத்துறையினர் அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, கம்பி வேலி அமைத்து தமிழக பகுதி மலைவாழ் மக்கள் சென்று வர அனுமதி மறுத்தது.



இதனால், மலைவாழ் மக்கள் 6 கி.மீ., சுற்றி கூட்டாறு வழியாக சென்று வந்தனர். தமிழக வனத்துறை அதிகாரிகள் சார்பில் கேரளா வனத்துறையிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், மலைவாழ்மக்கள் திரும்ப அந்த வழித்தடத்தைப் பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சாக்கு போக்கான பதில்களை கூறி வந்தனர். 4 மாதங்கள் ஆகியும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் தமிழக வனத்துறை சார்பில் எடுக்கப்படவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் பெய்து வரும் கன மழை மற்றும் கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இப்பகுதி மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வந்த கூட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அடிப்படைத் தேவைகள் மற்றும் மருத்துவ வசதிகளுக்கோ அவர்கள் ஆற்றில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது. நேற்று முன்தினம் ரேசன் பொருட்கள் வாங்கி சென்ற 3 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் ஆற்றைக் கடக்கும் போது குடும்ப அட்டைகள் மற்றும் ரேசன் பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அவர்கள் சிறிது தூரத்தில் மரக்கிளைகளைப் பிடித்து கரை ஒதுங்கி உள்ளனர்.



மலைவாழ் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசின் இலவச அரிசி கொண்டு சென்ற வாகனமும், ஆற்றைக் கடக்க முடியாததால் சின்னாறு வனத்துறை சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளான உணவுக்கு தேவையான பொருட்கள் கூட வாங்குவதற்கு வெளியில் வர முடியாத சூழல் உள்ளது. மலைவாழ் மக்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளுடன் தோளில் சுமந்தபடி, உயிரை பணயம் வைத்து தினமும் கடந்து செல்கின்றனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குடும்ப அட்டைகள் திரும்ப கிடைக்க அரசு அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறுகின்றனர்.



மழை தொடர்ந்தால் 600 குடும்பங்களும் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டாறு பகுதியில் மேல்மட்ட பாலம் கட்ட வேண்டும் அல்லது கேரளா வனத்துறையிடம் பேச்சு நடத்தி பல நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த சம்பக்காடு பகுதியை மீட்டுத் தர வேண்டும் என்பதே அப்பகுதி மலைவாழ் மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...