டாஸ்மாக் அமைக்காதீர்!: திருப்பூரில் மக்கள் மனு

திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

திருப்பூர் - பல்லடம் சாலை நொச்சிப்பாளையம் பிரிவு பேருந்து நிறுத்தம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகம் வந்து செல்லும் இடமாகும். அந்த பகுதியில் குடியிருப்புகளும் அதிகளவில் உள்ளது. 

இப்பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் கடை உள்ள நிலையில் கூடுதலாக டாஸ்மாக் கடையை திறக்க உள்ளதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அதில், கூடுதலாக மதுக்கடை திறந்தால் பாதுகாப்பு தன்மையற்ற சூழல் உருவாகும் என்றும் குடிமகன்களால் அதிகளவில் தொந்தரவு ஏற்படும் என்றும், ஆகவே மதுக்கடை அமைக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...