வீட்டுமனை வரைமுறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சலில் வீட்டுமனை வரைமுறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சலில் வீட்டுமனை வரைமுறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார். 

தமிழகம் முழுவதும் அனுமதியற்ற மனைப் பிரிவில் வாங்கிய வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கு தமிழக அரசு 6 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயனடையும் வகையில், மனைகளை வரைமுறைப்படுத்துவற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், எஸ்.பெரியபாளையம், அ.பெரியபாளையம் ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு முகாம் திருப்பூர் பி.என்.ரோடு நெருப்பெரிச்சலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கு விண்ணப்பித்தனர். 

இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், வரைமுறைப்படுத்தப்பட்ட மனைகளுக்கான ஆணைகளையும் அவர் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த முகாமில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன், உதவி ஆணையர் வாசுக்குமார், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளூர் திட்ட குழும அலுவலர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...