கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது'

கோவை: மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா எளிதாக கிடைப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில், (தெற்கு) சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையர் ரமேஷ் கண்ணா தலைமையில் குழு அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சுங்கம் பைபாஸ் சாலை பகுதியில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ராஜேஷ் குமார் என்பவரை ராமநாதபுரம் தனிப்படை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் ராஜேஷ் குமாரை விசாரித்ததில், அவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் இளைஞர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அதனால் ராஜேஷ் குமாரை போதைப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...