பருவ மழை தொடக்கம்; நீலகிரியில் விவசாய பணிகளுக்கு ஆயத்தம்

நீலகிரி: நீலகிரியில் பருவ மழை தொடங்கியுள்ளதால், விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், முளைப்புத்திறன் அதிகமுள்ள விதைகளை, பயன்படுத்த வேண்டும் என வேளாண் அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



நீலகிரி: நீலகிரியில் பருவ மழை தொடங்கியுள்ளதால், விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், முளைப்புத்திறன் அதிகமுள்ள விதைகளை, பயன்படுத்த வேண்டும் என வேளாண் அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழில் தேயிலை மற்றும் காய்கறி விவசாயம். இங்கு காய்கறிகள் 7 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. இதில், அதிகபட்சமாக கேரட் 2,200 ஹெக்டேரிலும், கிழங்கு 1,200 ஹெக்டேரிலும், முட்டைகோஸ் 900 ஹெக்டேரிலும் மற்ற காய்கறிகள் 2,700 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகிறது.

பருவமழை

கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதுடன் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டு விவசாயப் பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மழை பெய்யாததாலும், பனி தாக்கத்தாலும் நீலகிரி மாவட்டத்தில் காய்கறி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தண்ணீர் இல்லாமல் விவசாய நிலங்கள் வறண்டு தரிசாக காட்சியளித்தன.

ஆனால், இந்தாண்டு ஏப்ரல் மற்றம் மே மாதங்களில் கோடை மழை பெய்ததால் முதல் போகம் அமோகமாக இருந்தது. தற்போது தென் மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளது. இரண்டாம் போகத்துக்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தை உழுது சமன்படுத்தி விதைப்பு பணிக்கும் தயார்படுத்தி வருகின்றனர்.



அறிவுரை

விவசாயிகள் விதைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை அச்சுறுத்துவது போலி விதைகள். இந்த விதைகளை வாங்கி விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, மருந்து தெளித்து அறுவடைக்கு காத்திருக்கும் நிலையில், அவை முளைக்காமல் மகசூல் வெகுவாக குறைந்து விடுகிறது.

இந்நிலையில், மலைக் காய்கறி விதைகளின் முளைப்பு தன்மை மற்றும் புறத் தூய்மையை ஆய்வு செய்து, அதன்பின் பயிரிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உதகை வேளாண் அலுவலர்கள் கூறுகையில், "பட்டாணி, பிரன்சு பீன்ஸ் விதைகளின் முளைப்புத் திறன் 75 சதவீதம், புறத்துாய்மை 98 சதவீதம் இருக்க வேண்டும். முட்டை கோஸ், முள்ளங்கி, டர்னிப் விதைகளில் முளைப்புத் திறன் 70 சதவீதம், புறத்துாய்மை 98 சதவீதம், காலி பிளவர், புருக்கோலியில் முளைப்புத்திறன் 65 சதவீதம், புறத்துாய்மை 98 சதவீதம், கேரட் விதையின் முளைப்புத் திறன் 60 சதவீதம், புறத்துாய்மை 95 சதவீதம், முள்ளங்கி, டர்னிப்பில் முளைப்புத் திறன் 70 சதவீதம், புறத்துாய்மை 98 சதவீதம், பீட்ரூட், காப்சிகம், பினாச்சில் முளைப்புத்திறன் 60 சதவீதம், புறத்துாய்மை, 98 சதவீதம் இருக்க வேண்டும்.

விவசாயிகள் தாங்கள் பயன்படுத்தும் விதைகளை பரிசோதனை கொடுத்தால், முடிவுகள் ஏழு நாட்களில் அவரவர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். விதைப் பரிசோதனை கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும். எனவே, விவசாயிகள், விதைப் பரிசோதனை செய்து பயிர் செய்ய வேண்டும்." என்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...