தமிழக முதலமைச்சரை 'பிட்னஸ் சேலன்ஞ்'க்கு அழைக்கும் சத்குரு

கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை ஈஷா யோகா சத்குரு 'பிட்னஸ் சேலன்ஞ்'க்கு அழைப்பு விடுத்துள்ளார்.


கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை ஈஷா யோகா சத்குரு 'பிட்னஸ் சேலன்ஞ்'க்கு அழைப்பு விடுத்துள்ளார்.



கிரிக்கெட் வீரர் விராத் கோலி உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, பிரதமர் மோடிக்கு சவால் விட்டார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர், தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து, பலரும் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 'பிட்னஸ் சேலன்ஞ்சை எதிர்கொள்ளுமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் சத்குரு அழைப்பு விடுத்துள்ளார்.



அவரது அழைப்பை ஏற்று, அரசியல் பிரமுகர்கள் ஈஷா யோகா மையத்திற்கு வருவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...