விவசாயக் கிணற்றில் விழுந்த 3 காட்டு யானைகள் பத்திரமாக மீட்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உணவு தேடிவந்தபோது, விவசாயக் கிணற்றில் விழுந்த மூன்று காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டன.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உணவு தேடிவந்தபோது, விவசாயக் கிணற்றில் விழுந்த மூன்று காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டன. 

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வந்த மூன்று காட்டு யானைகள் கானக்குந்தூர் கிராமப் பகுதிக்குள் உணவு தேசி நுழைந்தன.

விளைநிலங்கள் வழியாக வந்த அந்த யானைகள், மருதவேல் என்பவருக்குச் சொந்தமான 15 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தன. சருக்கலான பகுதி வழியாக கிணற்றுக்குள் விழுந்ததால், யானைகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. 



இந்த சூழலில், அங்கு சென்ற பொதுமக்கள் யானைகள் நீரில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள், கிணற்றுக்குள் தவித்துக் கொண்டிருந்த மூன்று யானைகளையும் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் மீட்டனர். பின்னர் அந்த யானைகளை கடம்பூர் வனப்பகுதிக்குள் சென்று விட்டனர். 



Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...