கோவையில் ரத்து செய்யப்பட்ட விமானங்களை மீண்டும் இயக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவை: கோவையில் ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களை மீண்டும் இயக்குவதோடு, கூடுதலாகப் பெரிய ரக விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: கோவையில் ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களை மீண்டும் இயக்குவதோடு, கூடுதலாகப் பெரிய ரக விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாளொன்றிற்கு 12 முதல் 15 விமானங்கள் உள்நாடு மற்றும் சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வரும் நிலையில், இது கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்ட தொழில்துறையினருக்கு தொழில் நிமிர்த்தமாக சென்றுவர பெரும் உதவியாக இருந்து வந்தது. 

இந்நிலையில், கோவையிலிருந்து சென்னை செல்லும் 4 விமானங்கள், பெங்களூரூ செல்லும் 3 விமானங்கள் என 7 விமானங்களின் சேவையை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நிறுத்தப்போவதாக 'ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்' அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு கோவை தொழில்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இந்த முடிவு தொடர்பான தொழில் துறையினரின் ஆலோசனைக் கூட்டம் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கான்பிடரேசன் ஆப் இந்தியன் இண்டஸ்ட்ரீஸ் (CII) அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.ஐ.,யின் தலைவர் ரமேஷ் மற்றும் முன்னாள் தலைவர் ரவி சாம் ஆகியோர் ஜெட் ஏர்வேசின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகக் கூறினர். மேலும், கூடுதலாகப் பெரிய ரக விமானங்கள் (Air bus) இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் விடுத்தனர். 



தொடர்ந்து அவர்கள் பேசியதாவது :- விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது தொழில்துறையினரை கடுமையாக பாதிக்கும். இலாபகரமான முறையில் இயங்கி வரும் இந்த சேவைகள் தடைப்படுவதால், சுமார் 25 ஆயிரம் இருக்கைகள் மாதத்திற்கு ரத்தாகும். விமான சேவைகள் குறைக்கப்படுவதால் இருக்கைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் தொழில்துறையினர் கூடுதலாக செலவழிப்பதைத் தவிர்க்க, வணிகத்தையே தவிர்க்கும் நிலை ஏற்படும். 

விஸ்டா ஏர், ஏர் ஏசியா போன்றவற்றின் விமானங்கள் நிறுத்த இடமில்லாத நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அந்நிறுவனங்களின் சேவையை கோவைக்கு மாற்றவேண்டும். அதற்கு சில மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரையிலும் சேவைகளை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், கோவை விமான நிலையத்தில் இருந்து போயிங், ஏர் பஸ் போன்ற பெரிய ரக விமானங்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர், இணை அமைச்சர்கள், மற்றும் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...