காற்றில் பறக்கும் நீதிமன்ற ஆணை : கோவையில் தடையை மீறி நடக்கும் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு பாலக் கட்டுமானப் பணிகள்

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட காளப்பட்டி பகுதியில் ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட காளப்பட்டி பகுதியில் ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சியின் 36-வது வார்டுக்கு உட்பட்ட மோகன் கூட்டுறவு நகரில் உள்ள தனியார் தோட்டத்திற்கு செல்ல பாதை இல்லாததால், ஓடை நிலத்தில் பாலம் கட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி கொடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் அதிகாரம் கொடுக்கவில்லை. இருப்பினும், ஓடை புறம்போக்கு இடத்தில் பாலம் கட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்நிலையில், வரைபடத்தை ஆய்வு செய்து கட்டுமான பணிகளை தொடர மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால், பொதுப்பணித் துறையினர் தொடர்ந்து, பாலக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து, ஓடை இடத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டப்படுவதைக் கண்டித்து விவசாயி ராயப்பன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். கடந்த 14-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாநகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு பகுதியில் ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டுவதற்கு நீதிபதிகள் தடைவிதித்துள்ளனர். 

ஆனால், நீதிமன்றத் தடை விதித்த பிறகும், கடந்த ஒரு வாரமாக இரவு, பகலாகப் பாலம் கட்டும் பணிகள் இன்று வரை நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து சமூக ஆர்வலர் தியாகராஜன் கூறுகையில், "'நீர்நிலைகளில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது என ஏற்கனவே உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனையும் மீறி ஓடை நிலத்தை ஆக்கிரமித்து பாலம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பொதுப் பணித்துறையினர் பாலக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை நிரந்தரமாக தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...