கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: பத்துக்கு மேற்பட்ட பயணிகள் படுகாயம்

கோவை: பல்லடம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

கோவை: பல்லடம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளி என்ற பகுதியில் தாராபுரத்திலிருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பல்லடம் நோக்கி காடா துணிகளை ஏற்றிக்கொண்டு மினி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.



பெரும்பாளி என்ற பகுதிக்கு வந்த பொழுது எதிரே வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது மினி ஆட்டோ மோதியது. ஆட்டோ பேருந்தின் மீது மோதிய வேகத்தில் பேருந்தின் முன்புற கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் ஆறுமுகம் (47), பயணிகள் சுப்பம்மாள் (40), செல்வி (42) உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கும், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் அதி வேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.



இந்த நிலையில், தப்பியோடிய விபத்திற்கு காரணமான ஆட்டோ ஓட்டுனரை பல்லடம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்தினால் சுமார் ஒரு மணி நேரம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...