ஜம்மு காஷ்மீரின் ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகராக தமிழக அதிகாரி நியமனம்

ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் ஆளுநர் வோராவின் ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் ஆளுநர் வோராவின் ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜம்மு-காஷ்மீரில் ஆளும் பி.டி.பி., கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க., திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து மெஹபூபா முஃப்தி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.



இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்துவதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். எதிர்க்கட்சி ஆட்சி அமைக்க முன் வராததால் காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்கப்பட்டது.



இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்துக்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பி.வி.ஆர்., சுப்ரமணியனை  புதிய தலைமை செயலாளராக ஆளுநர் வோரா நியமித்துளார்.

அத்துடன் ஆளுநரின் ஆலோசகராக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி விஜயகுமார் மற்றும் பி.பி.விலாஸ் ஆகியோர் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுகொன்ற அதிரடிப்படையினருக்கு விஜயகுமார் ஐ.பி.எஸ்., தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...