ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் விற்பனை: வேளாண்மை பல்கலை., அறிவிப்பு

கோவை: பயறு வகை பயிர்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தனி அலுவலர் (விதைகள்) அறிவித்துள்ளார்.

கோவை: பயறு வகை பயிர்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தனி அலுவலர் (விதைகள்) அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி நிலையங்களான பயறுவகை துறை, கோயமுத்தூர், தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம், வம்பன் மற்றும் விழுப்புரம், மதுரை, சேலம், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள ஐந்து வேளாண்மை அறிவியல் நிலையங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் ‘விதை நடுவம்’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. 

இந்த ஆராய்ச்சி நிலையங்களில் பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு மற்றும் துவரை பயிர்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, குறிப்பாக, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட உளுந்து பயிரின் புதிய ரகங்களான, கோ.6, வம்பன் 6, வம்பன் 8, எம்டியு 1, கேகேஎம் 1, பாசிப்பயரில் கோ.7, கோ.8, துவரையில் கோ.ஆர்.ஜp.7 மற்றும் எல்.ஆர்.ஜ.p 41 ஆகிய ரகங்களில்; விதை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் அனைவரும் தங்களுக்குத் தேவையான விதைகளைப் பெற்று பயன்பெற தனிஅலுவலர் (விதைகள்), விதை மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர், தொலைபேசி 0422-6611232, 6611432, 9489056719 மற்றும் 9489347928 மின்னஞ்சல் [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...