பள்ளிக்கல்வித்துறையில் ஆசிய துணை கண்டமே திரும்பிப் பார்க்கும் வகையில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர்: ஆசிய துணை கண்டமே திரும்பி பார்க்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: ஆசிய துணை கண்டமே திரும்பி பார்க்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பல்லடம் தொகுதிகளுக்குட்பட்ட அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் புதிய கட்டிடங்களுக்கான பூமி பூஜை மற்றும் பல்லடம் புதிய கல்வி மாவட்டமாக்கும் தொடக்கவிழா நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆசிய துணை கண்டமே தமிழகக் கல்வித்துறையை திரும்பிப் பார்க்கின்ற வகையில் 12-ம் வகுப்பு முடித்தவுடனே வேலை வாய்ப்பு, அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் , 'கியூ.ஆர்' கோடுடன் கூடிய பாடப்புத்தகங்கள், 8-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வை-பை வசதி ஆகியவை செய்யப்படவுள்ளது. தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றியமைக்கப்படும், இவ்வாறு கூறினார்.



முகம் சுழிக்கும் பேச்சு:

முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது :- எஜமானருக்கு நன்றியுள்ள பிராணியாக உள்ள நாய் எப்படியோ, அதுபோல ஜெயலலிதாவிற்கு நன்றியுள்ளவராக உடுமலை ராதாகிருஷ்ணன் இருந்ததால் வீட்டுவசதித்துறையைப் பெற்றார். அதிலும், சிறப்பாக செயலாற்றினார், அதுபோல, தற்போதுள்ள கால்நடை பராமரிப்புத்துறையிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார், என்றார். அரசு நிகழ்ச்சியில் பொதுமேடையில் சக அமைச்சரைப் பிராணியோடு ஒப்பிட்டு அமைச்சர் செங்கோட்டையன் பேசியது கட்சியினர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...