பியூஷ் மானுஷுக்கு ஜாமீன்: மன்சூருக்கு மீண்டும் சிறை

பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 25-ம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 10,000 கோடி மதிப்பில் சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சாலை அமைக்க சென்னை முதல் சேலம் வரையில் 30 மீட்டர் அகலத்திற்கு, மொத்தம் சுமார் 2,200 ஹெக்டே அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது, சம்பந்தப்பட்ட நிலங்களில் உள்ள சுமார் 40,000 வீடுகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள் இடிக்கப்படும். இதற்கு ஏராளமான விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், சென்னை - சேலம் வரையில் 8 வழி பசுமை வழிச்சாலைக்கு எதிராக சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் போராட்டம் நடத்தினர். இதனால், அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இவர்கள் சார்பில் சேலம் மாவட்டம் ஓமலூர் கிளை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுவதால் பியூஷ் மானுஷ், மன்சூர் அலிகான் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதே சமயம், நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை நிராகரித்தனர். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...