அரசு காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்

கோவை : அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை : அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ சிறப்பு மாநாடு கோவையில் தனியார் அரங்கில் நடைபெறுகிறது. மாநாட்டில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வேலையின்மையால் இளைஞர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற சூழலில், அரசுத்துறையில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. உடனடியாக அனைத்து பணியிடங்களையும் நிரப்பத் தமிழக அரசு உத்தரவிட வேண்டும். 

மேலும், வட்டாரங்களில் உருவாகும் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒரு உதவி இயக்குநர் பணியிடம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நாளை நடைபெற உள்ள மாநாட்டில் பல்வேறு துறைச் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றியும், கோரிக்கைகளை வென்றெடுக்கும் இயக்க முடிவுகள் குறித்தும் பிரதிநிதிகள் விவாதித்து முடிவெடுக்க உள்ளனர். இம்மாநாட்டில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...