விரைவில் அறிமுகமாகிறது இளம் தலைமுறையினருக்கான 'ஸ்டார்ட் அப் பாலிசி திட்டம்'

கோவை: தமிழகத்தில் இளம் தலைமுறையினரை தொழில்முனைவோர்களாக மாற்றும் ஸ்டார்ட் அப் பாலிசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என சிறு, குறுந்தொழில் துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.



கோவை: தமிழகத்தில் இளம் தலைமுறையினரை தொழில்முனைவோர்களாக மாற்றும் ஸ்டார்ட் அப் பாலிசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என சிறு, குறுந்தொழில் துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஃபோர்ஜ் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அப்போது. நாடு முழுவதும் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக சிறு, குறு தொழில்துறையின் முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்களின் அரியக் கண்டுபிடிப்புகள் பாராட்டத்தக்கது. தமிழக அரசும் மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, தமிழக அரசு அறிவித்துள்ள "இனோவேசன் வவுச்சர் ஸ்கீம்" எனப்படும் திட்டம் மூலம் மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புகளை முழு வடிவமாக்க ரூ. 2 முதல் ரூ. 5 லட்சம் வரை நிதி உதவி அளித்து வருகிறது. இதுபோன்று ஆண்டிற்கு 400 புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். அதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் தொழில் துவங்குவதை ஊக்குவிப்பதற்கான 'ஸ்டார்ட் அப் பாலிசி திட்டம்' அடுத்த மூன்று மாதங்களில் செயல்படுத்தப்படும்.

இதேபோல, தமிழகத்திலுள்ள மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பலகலைக்கழகம் உட்பட 300 கல்லூரிகளில் தொழில் முனைவோர் மையம் துவங்கப்பட்டுள்ளது. மேலும், 150 கல்லூரிகளில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...