கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வதந்தி: அமைச்சர் எஸ்.பி., வேலுமணி

கோவை: 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தவறாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தவறாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'சூயஸ்' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, 30 ஆண்டுகளுக்கு, ரூ. 3,100 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத் திட்டம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், குடிநீர் கட்டணம் உயருமா...? பொதுக் குழாய்கள் நீக்கப்பட்டு விடுமோ..? என்ற அச்சம் கோவை மக்களிடையே எழுந்துள்ளது. மேலும், கோவை குடிநீர் விநியோகம், தனியார் மயமாக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பேசுகையில், "கோவையில் சுமார் ரூ. 3,000 கோடி செலவில் 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டம் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.  பராமரிப்பு மட்டுமே தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...