உதகை எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

நீலகிரி: உதகையில் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் எச்.ஏ.டி.பி., மைதான சீரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: உதகையில் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் எச்.ஏ.டி.பி., மைதான சீரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டில் உதகை எச்.ஏ.டி.பி., மைதானம் உள்ளது. இங்கு, தடகளம் மற்றும் கால்பந்து, வாலிபால் உட்பட பல்வேறு விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆண்டுதோறும் இங்கு மாநில, தேசிய, சர்வதேச அளவிலான வீரர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால், இந்த மைதானத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.



இதைத் தொடர்ந்து, இந்த மைதானத்தைப் புனரமைக்க, மத்திய நகர்ப்புற விளையாட்டு உள்கட்டமைப்பு சார்பில் நிதி ரூ. 5 கோடியும், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ரூ. 2 கோடியும் ஒதுக்கப்பட்டது. இதில், இங்குள்ள தடகள மைதானத்தை 'சிந்தடிக்' ஓடுதளமாக தரம் உயர்த்தத் திட்டமிடப்பட்டது. இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன. டெண்டர் எடுத்த நாளில் இருந்து ஒரு ஆண்டுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.



கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்தப் பணிகளை செய்து வந்தது. பல்வேறு காரணங்களால் இப்பணி தாமதமாக தொடங்கியது. இதனால், குறிப்பிட்ட காலத்துக்குள் பணி நிறைவு பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, தற்போது, பணியில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால், நிதி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இங்குப் பணிகள் நிறைவு பெறாத காரணத்தால், விளையாட்டு வீரர்களும் பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது.



இது குறித்து விளையாட்டு வீரர்கள் கூறுகையில், "இங்கு முன்பு, நாள்தோறும் காலை, மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள, நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். மேலும், பல்வேறு பயிற்சிகளுக்கும், விளையாட்டு வீரர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், மைதானத்தின் பணிகள் விரைவாக நிறைவு பெற்றால், கால்பந்து, தடகளம் உட்பட பிற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குவிப்பதாக அமையும். இங்குப் பணியாற்றிய விளையாட்டு அலுவலர் ஓய்வு பெற்று சென்றார். இதனால், பணியில் மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.



Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...