சிறுவாணி அருகே நெடுஞ்சாலைத்துறையினரின் அலட்சியத்தால் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் காயம்

கோவை: சிறுவாணி அருகே நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியமாக செயல்பட்டதால், மரக்கிளை விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் படுகாயமடைந்தனர்.

கோவை: சிறுவாணி அருகே நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியமாக செயல்பட்டதால், மரக்கிளை விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் படுகாயமடைந்தனர். 

கோவை மாவட்டம் சிறுவாணி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அந்த வழியாக உள்ள சில மரங்களை வெட்ட வருவாய்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, விரிவாக்கப் பணிகளுக்கு ஏதுவாக, கள்ளிப்பாளையம், கருப்பராயன் கோவில் அருகே உள்ள புளிய மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்கள் முறையான பாதுகாப்பு இல்லாமல், அலட்சியமாக இந்தப் பணிகளை செய்து வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்து வந்தனர். 



இந்த நிலையில், இன்று காலையில் வங்கிக்குச் சென்று வந்த போளுவாம்பட்டியை சேர்ந்த இரு பெண்கள் சிறுவாணி சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களின் மீது திடீரென மரக்கிளை முறிந்து விழுந்தது. இதில், ஒரு பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, அவர்களின் இருசக்கர வாகனமும் சேதமடைந்தது. போக்குவரத்து இல்லாத சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது பணியாளர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்த சம்பவம் மேலும், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 



இதனிடையே, இந்த விபத்திற்குக் காரணமான சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் மருத்துவ செலவையும், வாகன பழுதுபார்ப்பையும் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...