சந்தைப்படுத்துதல் மற்றும் பயிர் பொருளாதாரம் விவசாயிகளுக்கு மிகவும் அவசியம் : மயிலானந்தன்

கோவை : வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் பயிர் பொருளாதாரம் விவசாயிகளுக்கு மிகவும் அவசியம் என எஸ்.கே.எம். குழுமத் தலைவர் எஸ்.கே.,எம். மயிலானந்தன் தெரிவித்துள்ளார்.

கோவை : வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் பயிர் பொருளாதாரம் விவசாயிகளுக்கு மிகவும் அவசியம் என எஸ்.கே.எம். குழுமத் தலைவர் எஸ்.கே.,எம். மயிலானந்தன் தெரிவித்துள்ளார். 



இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. பொதுமக்களிடையே வேளாண் தொழில் மீதான நாட்டத்தை உருவாக்கவும், வெற்றிகரமாக சிந்தனைகள் மற்றும் சிறந்த விவசாயிகளின் வாழ்க்கை முறை குறித்து ஆலோசனை செய்தல் போன்றவற்றிற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஈரோட்டைச் சேர்ந்த எஸ்.கே.எம். குழுமத் தலைவர் எஸ்.கே.,எம். மயிலானந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உரையாற்றினார். 



அவர் பேசியதாவது :- பயிர் விதைப்பது முதல் அறுவடை வரையில் உள்ள பொருளாதார நிலைக் குறித்து தெரிந்து கொண்டால், நல்ல இலாபம் பெறுவதோடு, ஏமாற்றப்படுவதில் இருந்து விவசாயிகள் விடுபடலாம். மேலும், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் நடவடிக்கையைச் செய்து கொடுத்தால், நஷ்டத்தை, இலாபகரமானதாக விவசாயிகள் மாற்ற முடியும், என்றார்.



இந்த நிகழ்ச்சியில், 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, பயனடைந்தனர். மேலும், இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் புத்தகங்கள், வேளாண் பொருட்கள், இயந்திரங்கள், விதைகள் போன்ற விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...