ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கொங்கு மண்டலத்தில் தி.மு.க.,வினர் போராட்டம்

கோவை: சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாமக்கல்லில் நேற்று ஆளுநரின் காருக்கு கறுப்புக் கொடி காட்டியதாக தி.மு.க.,வைச் 192 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் இந்தக் கைது சம்பவத்தைக் செய்யப்பட்டதைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் தி.மு.க.,வினர் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன், சேகர்பாபு, ரங்கநாதன், ஆ.ராசா, மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். 



இந்த நிலையில், சென்னையில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல, சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சி.என். ராஜன் தலைமையில், சின்னியம்பாளையம் அருகே தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். வால்பாறையிலும் தி.மு.க.,வினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.



இதைத் தொடர்ந்து, திருப்பூரில் தி.மு.க., சார்பில் குமரன் சாலையில் சாலை மறியல் நடத்தப்பட்டது. பிரதான சாலையான குமரன் சாலையில் நடைபெற்ற மறியல் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை போலீசார் கைது செய்து, பின்னர் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். தி.மு.க.,வினரின் இந்த திடீர் சாலை மறியிலால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல, நீலகிரி மாவட்டம் உதகை காபிஹவுஸ் சதுக்கப் பகுதியில் தி.மு.க.,வினர், சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...