கோவையில் குடிநீர் வினியோகிக்கும் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை: அமைச்சர் வேலுமணி விளக்கம்

கோவை: கோவையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை என்றும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வைத்து அந்த நிறுவனத்திடம் வேலை வாங்கப்போவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார்.

கோவை: கோவையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை என்றும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வைத்து அந்த நிறுவனத்திடம் வேலை வாங்கப்போவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் கலையரங்கத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்கள் திருமணத்திற்கு திருமண உதவித் தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று பயனாளிகளுக்கு திட்டங்களை வழங்கினார்.

பட்டம் மற்றும் பட்டய படிப்பு படித்த பெண்கள் 1,446 பேருக்கு 50 ஆயிரம் ரூபாயும், பத்தாம் வகுப்பு முடித்த 633 மாணவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும், 2216 பேருக்கு தலா ஒரு பவுன் தங்கமும் என மொத்தம் 13.94 கோடி ரூபாய்க்கான நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- 

24 மணி நேரம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் கடந்த 2008-ல் தி.மு.க., ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. தற்போது அ.தி.மு.க., அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக சூயஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்த போடப்பட்டுள்ளது. 

தண்ணீர் விநியோகிக்கும் திட்டத்தை முழுமையாக அவர்களிடம் கொடுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகத்திடம் தான் முழு கட்டுப்பாடும் உள்ளது. இது ஒரு அருமையான மற்றும் மக்களுக்கு பயனளிக்கும் திட்டம். எந்த ஒரு நல்ல திட்டம் வந்தாலும் விமர்சிக்கப்படுகின்றது.

தண்ணீர்

கோவை மக்களுக்கு போதுமான தண்ணீர் நமது மாவட்டத்தில் உள்ளது. ஆனால், அதனை வினியோகம் செய்வதில்தான் சிக்கல் இருக்கின்றது. தண்ணீர் உரிமை வெளிநாட்டுக்கு கொடுக்கப்படவில்லை. மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் அந்த நிறுவனத்திடம் வேலை வாங்கப்போகின்றோம்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...