கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பசு: பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை

கோவை: தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்த பசுவை, கோவை மாவட்ட தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர்.

கோவை: தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்த பசுவை, கோவை மாவட்ட தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர். 

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் கிருஷ்ணகுமார் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வழக்கமாக மாடுகளை கட்டிவைத்திருப்பது வழக்கம். 

இந்த நிலையில், நேற்று இரவு பசு ஒன்று தோட்டத்தில் இருந்த 15 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தோட்டத்தின் உரிமையாளர், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வீரர்கள், கயிறு கட்டி பசுவை தூக்க முயன்றனர். 



தொடர்ந்து, சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பசு பத்திரமாக மீட்கப்பட்டது. சிறு காயங்களும் இன்றி பசுவை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...