உரிமைகளை வழங்க மறுத்தால் அரசு மீது வழக்கு: பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் கோவையில் பேட்டி

கோவை: கண் பார்வையற்றவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு உரிமைச்சட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கவில்லை எனில் தமிழக அரசு மீது வழக்கு தொடர இருப்பதாக தேசிய பார்வையற்றோர் இணையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.கே ருங்கடா தெரிவித்தார்.


கோவை: கண் பார்வையற்றவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு உரிமைச்சட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கவில்லை எனில் தமிழக அரசு மீது வழக்கு தொடர இருப்பதாக தேசிய பார்வையற்றோர் இணையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.கே ருங்கடா தெரிவித்தார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- 

கண் பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த இட ஒதுக்கீட்டை ஆறு மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முறையாக அமல்படுத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தியுள்ளது. இந்த விசயத்தில் தெளிவான புள்ளி விபரங்கள் கூட தமிழக அரசிடம் இல்லை. உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு வழங்கிய ஆணையின் படி மத்திய மாநில அரசுகள் பார்வையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படாததால் மத்திய அரசின் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்காத தமிழக அரசு மீதும் வழக்கு தொடர தயாராக இருக்கிறோம். வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் கண் பார்வையற்றவர்களுக்கு உணவு பாதுகாப்பு, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு உள்ளிட்ட வசதிகளையும் தமிழக அரசு கட்டாயம் செய்து தர வேண்டும்.

கண்பார்வையற்றோர் படிக்கும் வகையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பிரெய்லி புத்தகத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பார்வையற்றவர்களுக்கான உரிமைகளை வழங்க மறுத்தால் அரசின் மீது வழக்கு தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பார்வையற்றவர்களுக்கு சலுகைகள் வழங்காத ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் அரசு மீது அந்தந்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...