நீங்கள் சுத்தம் செய்துட்டே வாங்க..! நாங்க அசுத்தம் செய்துட்டே வர்ரோம்...! : வாலாங்குளம் மருத்துவக் கழிவுகளால் மாசு

கோவை: கோவையில் உள்ள நீர்நிலைகளை தூய்மைச் செய்யும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், வாலாங்குளத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் தன்னார்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை: கோவையில் உள்ள நீர்நிலைகளை தூய்மைச் செய்யும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், வாலாங்குளத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் தன்னார்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 



கோவை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து அனைத்து நீர்நிலைகளிலும் தூர்வாருதல், சீரமைப்புப் பணிகள் போன்ற மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குளங்கள், ஏரிகள் போன்ற நீர்த்தேக்கங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைப்புத் தருமாறு பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 



இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உக்கடம் வாலாங்குளத்தில் தன்னார்வலர்கள் களப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குளத்தில் மருத்துவ கழிவுகளும், தடை செய்யப்பட்ட குட்கா பாக்குகளின் கவர்களும் கிடந்தது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மருத்துவ கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் நீரில் கலந்து விடுகின்றன. இந்தக் குளத்தில் பிடிக்கப்படும் மீன்களை கோவை நகரில் உள்ள பொதுமக்கள் அனைவரும் சாப்பிட்டு நோய் தொற்று ஏற்படுமே என்ற எண்ணத்தில் தன்னார்வலர்கள் மிகவும் வருந்தினர். இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுகளைக் கொட்டியவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.



இலாப நோக்கமற்று கோவையில் உள்ள நீர்நிலைகளை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வரும் இந்தத் தூய்மைப் பணியில் பங்கெடுக்காவிட்டாலும், இதுபோன்ற சீர்கேட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது அனைவரின் கருத்தாகும். 

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...