கோவையில் குடிநீர் வினியோகம் தொடர்பாக வதந்தி: போலீசாரிடம் மாநகராட்சி நிர்வாகம் புகார்

கோவை: கோவையில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.



கோவை: கோவையில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன், மாநகராட்சி ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, 26 ஆண்டுகளுக்கு, சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து, இனி குடிநீர் கட்டணத்தை யார் விதிப்பார்கள்? குடிநீர் கட்டணம் உயருமா? பொது குழாய்களின் நிலை என்ன? போன்ற கேள்விகள் எழுந்தது.

குடிநீரை தனியார் மயப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து, சூயஸ் நிறுவனம், சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கவும் மற்றும் அவற்றை பராமரிக்கும் பணிகளில் தான் ஈடுபடும் என்றும் கட்டணம் நிர்ணயிப்பது முதல் மற்ற அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், சூயஸ் உடனான ஒப்பந்தம் குறித்து, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன் மாநகராட்சி சார்பில், சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் உண்மைக்கு புறம்பாக வதந்தியை கிளப்பியவர்கள் மீது உக்கடம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 504, 505(II)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...