திருப்பூர், நீலகிரியில் போதை பொருள் எதிர்ப்பு தின பேரணி

திருப்பூர்: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

திருப்பூர்: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.



சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருப்பூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். தென்னம்பாளையம் அரசு பள்ளியில் இருந்து பல்லடம் சாலை வழியாக அரசு கலைக்கல்லூரி வரை ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணியை மாநகர காவல் ஆணையர் மனோகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



இதே போல், நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய இந்த பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேரிங்கிராஸ் சென்றடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.



Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...