காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு; மூக்கைப் பிடிக்கும் பயணிகள்

கோவை: காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் வெளியேறி பயணிகளை அவதிக்குள்ளாக்கியது.

கோவை: காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் வெளியேறி பயணிகளை அவதிக்குள்ளாக்கியது.

காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்தில் நான்கு தளங்கள் உள்ளன. இங்கு திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்படும் முதல் தளத்தில், கழிவுநீர் குழாயில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு அவ்வப்போது சரி செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில், தாய்மார்கள் பாலூட்டும் அறையின் வாசலில் இன்று காலை மீண்டும் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறியது. இதனால், பேருந்து ஓட்டுநர்களும், பயணிகளும் கடும் அவதியடைந்தனர்.

"ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. தூய்மை நகரங்கள் ஆய்வு, அமைச்சர்களின் வருகை போன்ற நாட்களில் மட்டுமே சுத்தமாக இருப்பது போல் பராமரிக்கப்படுகின்றன." என்று குற்றம்சாட்டுகிறார் தினமும் கோவையில் இருந்து திருப்பூர் சென்றுவரும் பயணி ஒருவர்.

இது தொடர்பாக, மாநகராட்சி ஊழியர்களிடம் புகாரளிக்கப்பட்டு கழிவுநீர் உடைப்பு சரி செய்யப்பட்டது.



பேருந்து நிலையங்களில் அமைக்கப்படும் உணவகங்கள், பேக்கரிகள் போன்ற கடைகளால் அதிக அளவு கழிவு நீரும், குப்பைகளும் உருவாவதாக பெரும்பாலானோர் புகார் தெரிவிக்கின்றனர்.



Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...