பல்லடம் அருகே மளிகை கடையில் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பூர்: பல்லடம் அருகே மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.60,000 கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே மளிகை கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.60,000 கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நொச்சிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் செந்தில். அதே பகுதியில் கடந்த 15 வருடங்களாக மளிகை கடை நடத்தி வருகிறார். 



இந்நிலையில், நேற்று வழக்கம் போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று கடையை திறந்த அவர் அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடைப்பதை பார்த்தார். மேலும், கடையில் இருந்த ரூ. 60,000 பணம் திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் வீரபாண்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் விசாரித்ததில் கடையின் மேற்கூரையைப் பிரித்து மர்ம நபர் கடைக்குள் உள்ளே இறங்கியது தெரிய வந்தது.

தொடர்ந்து, கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து கடையின் உள்ளே இறங்கி திருடி சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...