ஆன்லைன் மூலம் பண மோசடி செய்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த கோவை மக்கள்

கோவை: ஆன்லைன் மூலம் பண மோசடி செய்தவர் மீது இரண்டு மாவட்ட காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களே மோசடி செய்தவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது.

கோவை: ஆன்லைன் மூலம் பண மோசடி செய்தவர் மீது இரண்டு மாவட்ட காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களே மோசடி செய்தவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், கோவையில் ஒயிட் காலர் அசோசியேசன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கோவையில் கடந்த மூன்று வருடங்களாக இந்த நிதி நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. 600-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.50 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக இந்த நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். 

பல்வேறு திட்டங்களின் பெயரில் சிவக்குமாருடன் , முருகேஷ் , சேகர் , லட்சுமி , விமலா ஆகியோர் இணைந்து பணத்தை சுருட்டியதாக தெரிகிறது. இரட்டிப்பு பணம், பரிசு மழை போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமார்ந்தனர். அந்த பணத்தோடு சிவக்குமார் கடந்த நான்கு மாதங்களாக தலைமறைவாகிவிட்டார்.

இப்படி தலைமறைவாக இருந்த மோசடி நபர்களை பலகட்ட தேடுதல்களுக்கு பிறகு அவருடைய வீட்டு உபயோகப்பொருட்களை ஏற்றிச் சென்ற வண்டியின் எண் மூலம், ஆர்.டி.ஓ அலுவலக உதவியுடன் அந்த வண்டியின் ஓட்டுநரை தேடிச்சென்றுள்ளனர். 

ஓட்டுநர் தந்த தகவல்களின் அடிப்படையில் திருச்சியில் இருந்த சிவக்குமாரை பாதிக்கப்பட்டவர்களே பிடித்துள்ளனர். ஆனால், பிடிபட்ட நிலையில் பணத்தை திருப்பித் தந்துவிடுவதாக கூறியதை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் அவரை விட்டுவிட்டனர். 

ஆனால், சிவக்குமார் அன்று இரவே வீட்டை காலி செய்து அடுத்து ஊருக்கு சென்றுள்ளார். இப்படியே 4 ஊர்களுக்கு சென்ற சிவக்குமாரை பாதிக்கப்பட்ட பொது மக்கள் பிடித்து கோவை மாநகர காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். 

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் என 2 மாவட்ட காவல்துறையிடம் புகார் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், மோசடி செய்தவரை பாதிக்கப்பட்டவர்களே கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...