மதுக்கடை வேண்டும் : பொதுமக்களுடன் மல்லுக்கட்டிய குடிமகன்கள்

திருப்பூர்: பல்லடம் பகுதியில் இன்று புதியதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்திய நிலையில் அங்கு சென்ற குடிமகன்கள் கட்டாயம் மதுக்கடை வேண்டும் என்று வாக்குவாதம் நடத்தினர்.

திருப்பூர்: பல்லடம் பகுதியில் இன்று புதியதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்திய நிலையில் அங்கு சென்ற குடிமகன்கள் கட்டாயம் மதுக்கடை வேண்டும் என்று வாக்குவாதம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சின்ன கோடங்கிபாளையம், என்.ஜி.ஆர் காலனி பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு புதியதாக அரசு மதுபான கடை திறக்கப்படுவதை அறிந்த அப்பகுதி மக்கள், கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் பகுதியில் மதுபான கடை வேண்டாம் என்று மனு அளித்தனர்.

ஆனால், பொதுமக்களுக்கு தெரியாமல் இன்று அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் புதிய மதுபான கடை திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகளும் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

மது பிரியர்கள்

இந்த களேபரம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் சில அங்கு வந்த குடிமகன்கள் மதுபான கடைக்கு நீண்ட தூரம் செல்வதால் அங்கு உள்ள கடையை மூடக்கூடாது என்று கூறினர். முற்றுகை போராட்டம் நடத்தி, அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்த பெண்கள் இதனைக்கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட, குடிமகன்களிடம் மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்படவே, சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் குடிமகன்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். மேலும், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களையும் கலைந்து போகக் கூறினர்.



மதுபான கடையை நிரந்தரமாக அகற்றாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவதாக தெரிவித்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...