24 மணிநேரக் குடிநீர் விநியோகத் திட்டம் மக்களுக்கான திட்டமல்ல : கோவையில் எம்.பி. கனிமொழி விமர்சனம்

கோவை : 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

கோவை : 24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இறுதியாக கோவையில் நடைபெற்ற மாவட்ட தி.மு.க., மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.



முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறியதாவது :- மக்களுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவே 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்த திட்டம் மக்களுக்கான திட்டம் அல்ல. அது அ.தி.மு.க.,வினர் தங்களை வளைமைபடுத்தி கொள்வதற்காகப் போடப்பட்ட திட்டமாகும். 

தமிழகத்தில் எந்த திட்டம் குறித்து விமர்சித்தாலும் கைது நடவடிக்கை என்பது எம்ர்ஜென்சியை காட்டிலும் மோசமான நிலையில் தமிழகம் இருப்பதைக் காட்டுகிறது. பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில், அது குறித்து அரசியல் கட்சிகள் மட்டுமே பேசி வருகின்றனர். பெண்கள் வாழவே தகுதி இல்லாத நாடாக இந்தியா உருவாகி வருவது வேதனையளிக்கிறது. 

வளர்ச்சித் திட்டங்களை ஒருபோதும் தி.மு.க., எதிர்ப்பதில்லை. ஆனால், மக்களின் கருத்துக்களை கேட்காமல் 8 வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 8 வழி பசுமை வழிச்சாலை திட்டம் மக்களுக்கு எதிரான திட்டமாக இருப்பதால் தான் தி.மு.க., அதனை எதிர்க்கிறது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...