மேட்டுப்பாளையம் பகுதிகளில் ஆபத்தான நிலையில் காணப்படும் கல்குழிகள்: உயிரிழப்புகளைத் தவிர்க்க மக்கள் கோரிக்கை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஐந்திற்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

இதற்காக ஆங்காங்கே மலையடிவாரங்களில் உள்ள பாறைகள் பல மீட்டர் ஆழம் வரை வெட்டி எடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை மற்றும் சிறுமுகை செல்லும் சாலையோரங்களில் மட்டும் இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில் கல்குழிகள் காணப்படுகின்றன.



இவற்றில் பெரும்பாலானவற்றில் தற்போது பாறைகள் வெடி வைத்து வெட்டி எடுக்கும் பணி முடிவடைந்த காரணத்தினால் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் ஆழமான கல்குழிகள் போதிய பாதுகாப்பில்லாமல் சுற்றுப்புற தடுப்புகளின்றி காணப்படுகின்றன.

மேலும், தற்போது தொடங்கியுள்ள பருவமழை காரணமாக இக்குழிகளில் தண்ணீர் நிரம்பி குட்டைகள் போல் காட்சியளிக்கின்றன. நீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த குழிகள் மிக ஆபத்தானது, இதில் இறங்கி குளிக்கவோ அல்லது மீன் பிடித்து விளையாடவோ முயற்சித்தால் நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க இயலாது என தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், பயன்பாட்டில் இல்லாத இது போன்ற கல்குழிகளை சுற்றி தடுப்புகள் ஏற்படுத்துவதோடு, எச்சரிக்கை அறிவிப்புகளையும் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

நீர்த் தேக்கத்தால் வழுக்கும் தன்மையோடு ஆளை விழுங்கக் காத்திருக்கும் இந்த ஆழமான கல்குழிகளை சுற்றி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதே இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...