உதகையில் அரசு கல்லூரியை தொடங்க காரணமானவருக்கு நினைவு தினம் அனுசரிப்பு

நீலகிரி: உதகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்த எச்.பி. ஆரிகவுடரின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


நீலகிரி: உதகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்த எச்.பி. ஆரிகவுடரின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டத்தின் முதல் சட்டமேலவை உறுப்பினர், முதல் சட்டமன்ற உறுப்பினர், என்.சி.எம்.எஸ் நிறுவனர், உதகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்க காரணமானவர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீலகிரி மாவட்டத்தில், மது விற்பனை செய்யமுடியாத நிலையை ஏற்படுத்தி பூரண மதுவிலக்கை கொண்டு வந்தவர் என பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் எச்.பி ஆரிகவுடர்.

இவரின் நினைவாக சென்னை மேற்கு மேம்பாலம் ரயில் முன்பு உள்ள சாலைக்கு ஆரிகவுடர் சாலை எனவும், கூடலூர், பண்டிப்பூர் எல்லையை பிரிக்கும் சாலையில் அமைந்துள்ள பாலத்திற்கு ஆரிகவுடர் பாலம் என பெயர் சூட்டி தமிழக அரசு கவுரவித்துள்ளது.

இந்நிலையில், இவரது 47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. உதகை என்.சி.எம்.எஸ் வளாகத்தில் அமைந்துள்ள இவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், என்.சி.எம்.எஸ் மேலாண்மை இயக்குனர், எச்.பி.ஆரிகவுடர் அவர்களின் குடும்பத்தாரும், என்.சி.எம்.எஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...