சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி மீது மேலும் ஒரு வழக்கு

சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு எதிராகப் போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி மீது போலீசார் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு எதிராகப் போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி மீது போலீசார் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, சென்னை வடபழனியில் கடந்த ஜனவரி மாதம் இயக்குநர் அமீரின் படவிழா ஒன்றில் வளர்மதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மாநில அரசுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி வளர்மதி மீது கலவரத்தைத் தூண்டியதாக போலீசார் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். எனவே, அவரைக் கைது செய்வதற்காக சென்னை போலீசார், சேலம் மகளிர் சிறைக்குச் சென்றுள்ளனர். அங்கு அவரைக் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு நெடுவாசல் திட்டத்தை எதிர்த்து பேருந்துகளில் துண்டு பிரசாரம் விநியோகம் செய்ததற்காக வளர்மதி கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், உயர்நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...