கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் விஷ வாயு தாக்கி பலி

கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவர் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவர் விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த இவர், தனியாக துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில், இன்று காலை காந்திபுரம் நூறடி சாலையில் 9-வது வீதியில் மாணிக்கவாசகம் என்ற இந்தியன் வங்கி மேலாளரின் வீட்டில் துப்புரவு பணிக்காக மகேந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் சென்றனர். அப்போது கழிவு நீர் தொட்டியை திறந்து சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கியதில் மகேந்திரன் உயிரிழந்தார். 



இதையடுத்து, மகேந்திரனின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.மாநகராட்சி பணியாளர்களுக்கு பதிலாக பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ததே உயிரிழப்பிற்கு காரணமெனவும், இப்பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உறவினர்கள் தெரிவித்தனர். 

குறைவான தொகைக்கு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய தனியார் துப்புரவு பணியாளர்களை ஈடுபடுத்தப்படுவதாகவும், இதனை தவிர்க்க வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இது தொடர்பான, செய்திகளுக்கு கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்யவும்: http://simpli-city.in/theatre-detail.php?id=507

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...