நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராகப் பதவியேற்ற தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளாவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராகப் பதவியேற்ற தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளாவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள், தங்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் எனக் கூறி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில மாநில அரசுகள் பல்வேறு சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளின் மூலம் சமூகத்தில் அங்கீகாரம் அளித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், அரசின் பல்வேறுத் துறைகளிலும் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, தமிழகத்தில், காவல்துறையில் பிரித்திகா யாஷினி, நஸ்ரியா உள்ளிட்ட திருநங்கைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 



இந்த நிலையில், இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா(36) பதவியேற்றுள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் சத்தியஸ்ரீ சர்மிளா வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர், இன்று முறைப்படி பதவியேற்றார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக நான் பொறுப்பேற்றதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக எனக்கு ஏராளமானோர் உதவியுள்ளனர். நிறையக் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனக்கு ஆதரவு அளித்த, உதவி செய்த அனைவருக்கும் நன்றி. 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, திருநங்கைகளின் வாழ்க்கைத்தரம் சற்று உயர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சி. இன்று நீதித்துறையில் நான் சேர்த்துள்ளேன். அனைத்துத் துறையிலும் திருநங்கைகள் சாதிக்க வேண்டும். எனது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்னாலான உதவியை செய்வேன்" என்றார். 

11 ஆண்டுகளுக்கு முன்னதாக, வழக்கறிஞராக தகுதி பெற்றிருந்தும், திருநங்கைகளுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வரையில் பதவியேற்க மாட்டேன் எனக் கூறி அதனைப் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...