இன்று தேசிய ஜி.எஸ்.டி. தினம்: வரிவிதிப்பால் முடங்கிப் போன பின்னலாடை நகரம்

திருப்பூர்: தேசிய அளவில் இன்று ஜி.எஸ்.டி., தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த வரி விதிப்பால் கடந்த ஓராண்டில் பின்னலாடை நகரமான திருப்பூரில் 30 சதவீத தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு,குறு தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


திருப்பூர்: தேசிய அளவில் இன்று ஜி.எஸ்.டி., தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த வரி விதிப்பால் கடந்த ஓராண்டில் பின்னலாடை நகரமான திருப்பூரில் 30 சதவீத தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு, குறு தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜுலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டது. இதற்கு, தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புக்கள் கிளம்பினாலும், காலப்போக்கில் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிகரமாக இந்த வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5% இருந்து அதிகபட்சமாக 28% வரைக்கும் ஜி.எஸ்.டி. வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஜுலை 1-ம் தேதி தேசிய ஜி.எஸ்.டி., தினத்தை அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்தது, அதன்படி, இன்று நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் பல்வேறு மாநிலங்கள் பயனடைந்துள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், பின்னலாடை நகரமான திருப்பூரை பொறுத்தவரை மிகவும் வருந்தத்தக்க ஒன்று என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து சிஸ்மா (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்) பொதுச்செயலாளர் பாபுஜி கூறியதாவது :- ஜி.எஸ்.டி.,யை வரும் போது பசு மாதிரி பால் தரும் என்று தான் நினைத்து வரவேற்றோம். பின்னர், தான் அது புலி போல் பாய்ந்து அடிக்கக்கூடிய ஒரு செயல் என்று தெரிந்தது. ரூ. 500, ரூ. 1,000 என சிறு, குறு தொழில் நிறுவனங்களில் வர்த்தகம் நடைபெறும். அதற்கும் கூட ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு என்பது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் புதிய முதலீட்டாளர்களின் வரவு முற்றிலும் குறைந்துள்ளது. புதிய முதலீட்டாளர்களின் வருகை இல்லை எனவும் கூறலாம்.



மேலும், ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் வங்கிகளில் பெறக்கூடிய சலுகைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, உள்ள சூழ்நிலையில் வருமானம் இல்லை என்றாலும், போட்ட கொள்முதல் கீழே போகக்கூடாது என்ற போராட்ட நிலைக்கு வந்து விட்டோம். அரசாங்கம் வேண்டுமானால் மார்தட்டிக் கொள்ளட்டும் நாங்கள் தொழில் துறையினருக்கு நன்மை தான் செய்கின்றோம் என்று, ஆனால், அரசைப் பொறுத்தவரையில் தவறான கொள்கை முறையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு தீர்வாக மத்திய அரசு குழு அமைத்து ஜி.எஸ்.டி.,யால் ஏற்படும் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.



மேலும், ஜி.எஸ்.டி.,யால் பின்னலாடை நிறுவனம் மட்டுமல்லாது, அனைத்து நிறுவனங்களும் வளர்ச்சி நம்பிக்கையை இழந்து விட்டோம். ஆயிரம் பேர் பணியாற்றக்கூடிய பெருந்தொழில் நிறுவனங்களுக்கும், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கும் ஒரே வரிவிகிதம் என்பது வருந்தத்தக்கச் செயலாகும். எங்களைப் பொறுத்தவரை ஜி.எஸ்.டி., என்பது தொழில் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. ஜி.எஸ்.டி.,யால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளோம், இவ்வாறு அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...