என்ஜின் கோளாறால் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதியில் நிறுத்தம்: காரின் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்

நீலகிரி: குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் காட்டேரி பகுதியில் நின்றது. பயணிகள் பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பப்பட்டனர்.



நீலகிரி: குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற நீலகிரி மலை ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் காட்டேரி பகுதியில் நின்றது. பயணிகள் பேருந்துகள் மூலம் மேட்டுப்பாளையம் அனுப்பப்பட்டனர்.

நீலகிரி மலை ரயில் தினமும் மதியம் 3.30 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும். இந்நிலையில், நேற்று மதியம் குன்னூரிலிருந்து புறப்பட்ட மலை ரயில் காட்டேரி பகுதிக்கு அருகே சென்ற போது, அங்குள்ள பாலத்தில் என்ஜின் பழுதாகி நின்றது.

உடனடியகாக ரயில்வே ஊழியர்கள் குன்னூரிலிருந்து வரவழைக்கப்பட்டனர். ஆனால், பழுதை சரி செய்ய கால தாமதமானதால், ரயில்வே நிர்வாகம் உடனடியாக பேருந்துகளை ஏற்பாடு செய்தது. இதனால், ரயிலில் பயணித்த 165 பயணிகள் ரயிலிலிருந்து இறக்கப்பட்டு மூன்று பேருந்துகளில் மேட்டுப்பாளையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ரயிலில் பயணித்த ஒரு கர்ப்பிணி பயணிக்கு கார் ஏற்பாடு செய்யப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு அனுப்பப்பட்டார். மேலும், தற்காலிகமாக பழுது சரி செய்யப்பட்டு, அந்த ரயில் இரவு 7 மணியளவில் காட்டேரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டது.

தற்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...