மதுபானக்கூட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் மனு

கோவை: டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய மதுபானக்கூட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கக் கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய மதுபானக்கூட உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கக் கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வீரகேளம் நாகராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள கடை எண்:1645 துணை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய மதுபானக் கடை உரிமையாளர் மற்றும் அடியாட்களை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:- மதுபானக்கூட உரிமம் பெற்ற பழம்பதி என்பவர் இந்த மதுபானக் கூடத்தை சுப்ரமணி என்பவருக்கு உள் வாடைக்கு விட்டுள்ளார். கடையை நடத்தி வரும் சுப்ரமணி சட்டத்திற்கு புறம்பாக இரவு, பகல் பாராமல் மது வியாபாரம் செய்வது மட்டுமல்லாமல், இதனைத் தட்டிக் கேட்கும் டாஸ்மாக் ஊழியர்களை அடியாட்கள் மூலம் தாக்குகின்றனர்.

கடந்த மாதம் 30-ம் தேதியன்று துணை விற்பனையாளர் மீது பழம்பதியின் சகோதரர் தாக்குதல் நடத்தியதில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனால், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. கடையின் துணை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும். மதுபானக்கூட உரிமதாரரின் காப்புத் தொகையை பறிமுதல் செய்வதுடன், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...