அரசு வழங்கிய இடத்தில் வீடுகட்ட இடையூறு: நீலகிரி ஆட்சியரிடம் ஆதிவாசி இனமக்கள் மனு

நீலகிரி: கூடலூர் தொரப்பள்ளி பகுதியில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் வீடு கட்டும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் ஆதிவாசி இனமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

நீலகிரி: கூடலூர் தொரப்பள்ளி பகுதியில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் வீடு கட்டும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் ஆதிவாசி இனமக்கள் மனு கொடுத்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தொரப்பள்ளி பகுதியில் ஆதிவாசி காட்டுநாயக்கன் இனத்தை சேர்ந்த 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 11.04.2018 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்களுக்கான நலத்திட்டத்தின் கீழ் 300.8 சதுரஅடி பரப்பளவில் வீடு கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 

இந்தச் சான்றின் அடிப்படையில் மேற்படி இடத்தைக் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்த பின், நேற்று வீடு கட்டுவதற்கான அஸ்திவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அப்போது, தனியார் எஸ்டேட் ஊழியர்கள், தங்களது முதலாளியிடம் கேட்காமல் எந்த வேலையும் செய்ய கூடாது எனக் கூறி, 2 காவலர்களுடன் வந்து வீடு கட்டும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். மீறி வீடு கட்டினால் ஜே.சி.பி. இயந்திரத்தை வைத்து வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கிவிடுவோம் என்று கூறியுள்ளனர். 

மேலும், அஸ்திவாரத்திற்காக தோண்டிய குழிகளை மூடி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். எனவே, அரசு வழங்கிய இடத்தில் வீடுகட்ட இடையூறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிவாசி இனமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்று அளித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...