மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா: அடிப்படைத் தேவைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.


கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 17-ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்குகிறது. 



27-வது ஆண்டாக நடைபெறும் இத்திருவிழா சிறப்பாக நடைபெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று கோவில் அலுவலகத்தில் நடைபெற்றது. 

கோவை வடக்கு சப்-கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, மின்சாரத்துறை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். 

கூட்டத்தின் போது, தற்போது ராஜ கோபுர பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் குண்டம் இறங்க வசதிகளாக எவ்வித இடையூறும் இல்லாமல் ஏற்பாடுகளை மேற்கொள்ள அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், குண்டம் திருவிழா நிகழ்வின் போது ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள் என்பதால் அடிப்படைத் தேவைகளான குடி தண்ணீர், கழிப்பறை, மருத்துவம், தடையில்லா மின்சாரம் என அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

பக்தர்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் வனப்பகுதியினை ஒட்டி கோவில் அமைந்துள்ளதால் இரவு நேரத்தில் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வன எல்லைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் பொருத்தி வன பணியாளர்களை கூடுதலாக பணியமர்த்தவும் வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...