முதலமைச்சர் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்- அப்பல்லோ நிர்வாகம்

முதல்வர் உடல்நிலை குறித்து இன்று காலை 8 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை மூத்த செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு உடல் நலம் பெற மே‌லும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்படி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முதலமைச்சர் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உடல் நிலை குறித்து வதந்திகளைப் பரப்புவோர் கண்காணிக்கப்படுவதாகவும், அவர்கள் மீது கடும் ‌‌‌நட‌வடிக்கை எடுக்கப்படும் என்றும்‌ காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...