உயிர் நிழல் 2016 -பிரம்மாண்ட விலங்கியல் புகைப்படக் கண்காட்சி

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஓசை அமைப்பு சார்பில் உயிர் நிழல் - 2016 புகைப்படக்  கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட வனத்துறை அதிகாரி ராமசுப்ரமணியம் கலந்து கொண்டு இக்கண்காட்சியை துவக்கி வைத்தார். இக்கண்காட்சி இன்று முதல் அக்டோபர் 6ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.



 





இது குறித்து ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறுகையில்:
13 வருடங்களாக இக்கண்காட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் 2500 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படங்கள் இன்றைய இளைஞர்களுக்கு காடுகளை பற்றிய பல்வேறு தகவல்கள் அறிந்து கொள்ளும் வகையில் இப்புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளான. இதில் உள்ள உயிரினங்களின் புகைப்படங்கள் இதுவரை யாரும் பார்த்திராத வகையில் வைக்கப்பட்டுள்ளது. 

இக்கண்காட்சியை பார்வையிடும் மாணவர்கள் மேற்கு தொடர்ச்சி மலைகள் தொடர்பான அனைத்து தகவலும் அறியும் வகையில் உள்ளது. இன்றிய சமுதாயத்தில் நாம் அனைவரும் காடுகளையும், உயிரினங்களையும் பாதுகாக்கபட வேண்டும். இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இந்தியாவில் தலைசிறந்த புகைப்பட கலைஞர்களின் புகைப்படம் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





இந்நிகழ்ச்சியில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ராமசாமி, ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ், கலைஞர்கள் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.இக்கண்காட்சியை, ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.













Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...